Wednesday 17 July 2019

செடிக்கின் பலவீனம்; இந்தியர்களுக்கான மில்லியன் கணக்கான நிதியில் முறைகேடு

கோத்தா கினாபாலு-

இந்திய சமூகத்திற்கான ஒதுக்கப்பட்ட மில்லியன் கணக்கான நிதி கடந்த கால அரசாங்கத்தின்போது தவறாக நிர்வகிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக 2014 முதல் 2018ஆம் ஆண்டு வரை இந்தியர் சமூக- பொருளாதார மேம்பாட்டு பிரிவு (செடிக்) நிர்வாகத்திடம் வெ.203.89 மில்லியன் நிதி  வழங்கப்பட்டதாக  தலைமை கணக்காய்வாளரின் 2018ஆம் ஆண்டுக்கான முதல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பிரதமர் துறை அமைச்சர், துணை அமைச்சர், செடிக்கின் நிர்வாகம் ஆகியவற்றின் பலவீனத்தால் அந்நிதி தவறாக கையாளப்பட்டுள்ளது.

இந்நிதிக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தெளிவான செயல்முறை தரநிலையை கொண்டிருக்கவில்லை.

செடிக்கிடம் வழங்கப்பட்ட இந்த நிதி பலவீனமாக பொது இயக்கங்களுக்கு சிலரது சுயநலன்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு முறையான தகவல்களை செடிக் கொண்டிருக்கவில்லை எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

No comments:

Post a Comment