Sunday 28 July 2019

மித்ரா: தொலைபேசியில் அழைத்து பேசுங்கள்- ராமசாமியை சாடினார் வேதமூர்த்தி

சுபாங்ஜெயா-
மித்ரா தொடர்பான எவ்வித சந்தேகங்களுக்கும் தன்னை தொலைபேசியில் அழைத்து பேசுங்கள்; அதை விடுத்து பொது நிலையில் தன்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என்று ஒற்றுமை துறை அமைச்சர் பொ. வேதமூர்த்தி பினாங்கு துணை முதல்வர் பி.ராமசாமியை சாடினார்.

மலேசிய இந்தியர் உருமாற்ற மையம் (மித்ரா) வெளிப்படைத்தன்மையுடனே நடந்து கொள்கிறது. யாருக்கு, எவ்வளவு பணம் வழங்கப்படுகிறது என்பதை அகப்பக்கத்தில் பதிவிடப்படுகிறது.

தன்னுடைய அமைச்சே இத்தகைய வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்கிறது எனவும் பிற அமைச்சுகள் அதுபோன்று வெளிப்படையாக மானிய ஒதுக்கீட்டை அறிவிக்கின்றனவா? என்பது தமக்கு தெரியவில்லை.

இப்போது நாம் ஒரே அரசாங்கத்தில் இருக்கின்றோம். ஏதேனும் சந்தேகம் என்றால் தொலைபேசியில் அழையுங்கள். அதை விடுத்து குற்றச்சாட்டுகளை அடுக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

2019ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 மில்லியன் வெள்ளி நிலை என்ன? என்று பி.இராமசாமி இதற்கு முன்னர் கேள்வி எழுப்பியிருந்தார்.

No comments:

Post a Comment