Wednesday 24 July 2019

ஆற்று தூய்மைக்கேடு; சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது ‘சொஸ்மா’ பாயும்- ஐஜிபி

கோலாலம்பூர்-

சிலாங்கூர் ஆற்றில் தூய்மைக்கேட்டை உண்டாக்கும் வகையில் சதிச் செயல்களில் ஈடுபடும் தரப்பினர் ‘சொஸ்மா’ சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று போலீஸ் படை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூர் ஆற்றை தூய்மைக்கேடாக்கும் நடவடிக்கையை போலீஸ் படை கடுமையாக கருதுவதாக கூறிய அதன் தேசிய போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர், முன்பு அமலில் இருந்த  உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (இசா) பொது உடைமைகள், மின்சாரம், நீர் நிலை ஆகியவற்றை சீர்குலைக்கும் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வழிவகுத்தது.

அதேபோன்று தற்போது சிலாங்கூர் ஆற்றை தூய்மைக்கேடாக்கும் தரப்பினர் மீது சொஸ்மா சட்டம் பாயக்கூடும். ஏனெனில், பொறுப்பற்ற சில தரப்பினரின் நடவடிக்கையினால் 4,5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இத்தகையை நடவடிக்கையில் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்று அவர் மேலும் சொன்னார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர் ஆற்றில் டீசல் கொட்டப்பட்டதால் அதன் 4 சுத்திகரிப்பு மையங்களும் மூடப்பட்டன. இதனால்  மாநிலத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டது.

சிலாங்கூர் ஆற்றில் டீசல் கொட்டப்பட்ட விவகாரத்தில் சதிச் செயல் இருக்கலாம் என்று நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment