Wednesday 17 July 2019

வேதமூர்த்தியின் புதிய கட்சியால் மஇகா கலக்கமடையவில்லை- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்-

அமைச்சர் வேதமூர்த்தி தொடங்கியுள்ள புதிய கட்சியால் தங்களுக்கு எந்த கலக்கமும் இல்லை என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வேதமூர்த்தி தொடங்கியுள்ள  மலேசிய முன்னேற்றக் கட்சி  பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் ஜசெக, பிகேஆர் போன்ற ஒரு கட்சியாகவே திகழ முடியும். இக்கட்சியில் யார் இணைந்துக் கொண்டாலும் கவலையில்லை.

மஇகா உறுப்பினர்கள் யாரேனும் இக்கட்சியில் சேர நினைத்தால் தாராளமாக இணைந்து கொள்ளலாம் என்றார் அவர்.

இந்நாட்டில் பழைமை வாய்ந்த கட்சியான மஇகா கடந்த பொதுத் தேர்தலில் இரு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment