Sunday 28 July 2019

தமிழ் இடைநிலைப்பள்ளி இந்தியர்களின் கனவு; கலைத்து விட வேண்டாம்- முகமட் நசீர், டத்தோ புலவேந்திரன் வலியுறுத்து

ரா.தங்கமணி

ஜார்ஜ்டவுன்-
தமிழ் இடைநிலைப்பள்ளி மலேசிய இந்தியர்களின் கனவு; அந்த கனவு ஒருபோதும் கலைந்து விடக்கூடாது பினாங்கு தமிழ் தஞ்சோங் முஸ்லீம் சங்கத் தலைவர் முகமட் நசீர், மலேசிய குற்றத் தடுப்பு அறவாரியத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ க.புலவேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
முகமட் நசீர்
தமிழ் இடைநிலைப்பள்ளியை நிர்மாணிப்பதற்கு பட்டவொர்த், பாகான் தொகுதியில் பினாங்கு மாநில அரசாங்கம் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பே அடையாளம் கண்டுள்ளது.

தற்போதைய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிப்பது தொடர்பில் ஆய்வுக்குழு ஒன்றை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக கல்வி துணை அமைச்சர் தியோ நி சியோங் கூறிய கருத்துக்கு முன்னாள் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மட்ஸிர் காலிட் எதிர்ப்பு தெரிவித்துள்ளது இந்திய சமுதாயத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் வாக்குறுதியான தமிழ் இடைநிலைப்பள்ளியை நிர்மாணிப்பதற்கு யாரும் தடைகல்லாக அமையக்கூடாது.

அதோடு மலேசிய இந்தியர்களின் தாய்மொழியான தமிழ்மொழியில் இடைநிலைப்பள்ளி அமைக்கப்படுவது மலேசிய இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு சமமாகும்.

எத்தனை எதிர்ப்புகள் தமிழ் இடைநிலைப்பள்ளியை நிர்மாணிக்கும் திட்டத்திலிருந்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பின்வாங்கிவிடக்கூடாது என்று அவரகள் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment