Tuesday 23 July 2019

கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் இந்திய மூதாட்டியிடம் கொள்ளை

ரவாங்-
இந்திய மூதாட்டி ஒருவரின் கண்கள், கைகளை கட்டி போட்டி நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது.
ரவாங், டெம்ப்ளர் பார்க்கில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கண்கள், கைகள் கட்டப்பட்ட அந்த மூதாட்டிக்கு பொதுமக்கள் உதவி புரிந்தனர்.

கறுப்பு நிறக் காரில் வந்த கொள்ளையர்கள் தன்னிடம் நகைகளை கொள்ளையடித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தன்னை இறக்கி விட்டுச் சென்றனர். அவர்கள் யாரென்று தெரியவில்லை என்று அந்த மூதாட்டி கூறுவது காணொளியில் இடம்பெற்றுள்ளது.

கண்கள் இறுக கட்டப்பட்ட நிலையிலும் சிறு துவாரத்தின் வழியாக சாலை கடந்து வந்ததாக அவர் கூறினார்.


No comments:

Post a Comment