Tuesday 23 July 2019

தமிழ் இடைநிலைப்பள்ளி; அரசு ஆராய்கிறது- கல்வி துணை அமைச்சர்

கோலாலம்பூர்-

இந்திய சமுதாயத்தின் கல்வி நிலையை மேம்படுத்தும் வகையில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு ஆய்வு மேற்கொண்டு வருவதாக கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தை செயல்படுத்தும் நடவடிக்கையாக இந்திய சமுதாய கல்வி நிபுணர்களைக் கொண்ட செயற்குழு அமைக்கப்படும் என்ற அவர், இந்த பரிந்துரைக்கு முழுமையான ஆய்வு தேவைபடுகிறது. அதன் அடிப்படையிலேயே நீண்ட கால தீர்வுகளை பெற முடியும்.

இந்த ஆய்வில், நிலையான அளவுகோல், மாணவர் திட்டம், சட்டவிதிகள், அரசாங்க நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் இதில் உள்ளடக்கப்படும் என்றார் அவர்.
பக்காத்தான் ஹராப்பானின் இந்திய சமுதாயத்திற்கான தேர்தல் கொள்கை அறிக்கையில் முழு உதவி பெறும் தமிழ்ப்பள்ளி நிர்மாணிக்கப்படும் என்ற வாக்குறுதியின் நிலை என்னவென்று செனட்டர் டி.மோகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

தமிழ் இடைநிலைப்பள்ளி தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் பரிந்துரைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment