Sunday 24 November 2019

'பாடாங் செட்டி' பெயர் மாற்றப்படக்கூடாது- MIV மணிமாறன் வலியுறுத்து

ரா.தங்கமணி

கிள்ளான்-
கிள்ளான் வட்டாரத்தில் இந்தியர்களின் பெருமையை பறைசாற்றுகின்ற 'பாடாங் செட்டி'யின் (செட்டி திடல்) பெயரை மாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது என்று மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் (MIV) சிலாங்கூர் மாநில தலைவர் மணிமாறன் வலியுறுத்தினார்.
இந்த திடல் இங்கு வாழ்ந்த செட்டியார்களின் வரலாற்றை எடுத்துரைக்கிறது. முன்பு இங்கு வாழ்ந்த அச்சமூகத்தினர் திடல் அமைந்துள்ள நிலம் உட்பட பல நிலங்களை தியாகம் செய்துள்ளனர். அந்நிலங்களில் இன்று பல அரசாங்க கட்டடங்கள் அமைந்துள்ளன.

கிள்ளான் வட்டார மக்களின் நலனுக்காக தங்களது நிலங்களை விட்டுக் கொடுத்துள்ள செட்டி சமூகத்திற்கு நன்றி கூறும் வகையில் அமைந்துள்ள பாடாங் செட்டியின் பெயரை மாற்றம் செய்யக்கூடாது.

பாடாங் செட்டியின் பெயரை மாற்றும் முயற்சியை கிள்ளான் மாநகர் மன்றம் முன்னெடுக்கக்கூடாது என வலியுறுத்திய மணிமாறன், பாடாங் செட்டியின் வரலாறு எக்காரணம் கொண்டும் அழிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment