Tuesday 26 November 2019

அன்வாரின் 'ரீஃபோர்மாசி' செய்யாததை 'ஹிண்ட்ராஃப்' சாதித்தது- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
மலேசிய அரசியல் வரலாற்றில் டத்தோஸ்ரீ அன்வாரின் 'ரீஃபோர்மாசி' இயக்கம் செய்து காட்டாததை 'ஹிண்ட்ராஃப்' போராட்டம் சாதித்து காட்டியது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
1998ஆம் ஆண்டு அன்றைய துணைப் பிரதமராக பதவி வகித்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறையில் அடைக்கப்பட்டபோது அவரது ஆதரவாளர்களிடையே எழுந்த அதிருப்தி அலை 'ரீஃபோர்மாசி' போராட்டமாக வெடித்தது.

இந்த போராட்டம் அதே ஆண்டு நடந்த தேர்தலில் எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, 3இல் 2 பெரும்பான்மை பெற்று தேசிய முன்னணி ஆட்சி புரிந்தது.

ஆனால் 2007ஆம் ஆண்டு இந்தியர் உரிமை போராட்ட களமாக அமைந்த 'ஹிண்ட்ராஃப்' போராட்டம் நாட்டின் அரசியல் சூழலையே ஆட்டி படைத்தது.
இந்த போராட்டத்திற்கு பின்னர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தலில் தேமு வசமிருந்த சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்கள் அன்றைய எதிர்க்கட்சி வசமானதோடு நாடாளுமன்த்தில் 3இல் 2 பெரும்பான்மையை தேமு இழக்கவும் வழிவகுத்தது.

அதன் தொடர்ச்சியாக 13ஆவது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் பெரும்பான்மையில் வென்றதோடு 14ஆவது பொதுத் தேர்தலில் மத்திய அரசாங்கத்தை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியமைக்க முடிந்தது.

'ஹிண்ட்ராஃப்' போராட்டம் ஒரு சமூகத்தின் போராட்டம் என்பதை காட்டிலும் சிறுபான்மை இனத்தின் உரிமையை பாதுகாக்கவும் இந்தியர்களிடையே நிலவும் அதிருப்தியை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லவும் வீதி போராட்டமாக அமைந்தது என்று அதன் 12ஆம் ஆண்டு நிறைவு நாள் குறித்து கருத்துரைத்த கணபதிராவ் இவ்வாறு கூறினார்.


No comments:

Post a Comment