Tuesday 26 November 2019

2020இல் தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாகட்டும்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
தேர்வு அடைவு நிலையில் தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி கண்டுள்ள சூழலில் 2020ஆம் ஆண்டு 'தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாக'  அமைய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில இந்திய சமூகத் தலைவர் (தாமான் ஸ்ரீமூடா)அ.பத்மநாதன் வலியுறுத்தினார்.
கோப்பு படம்
இவ்வாண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் தமிழ்ப்பள்ளிகள் 78.91 விழுக்காடு நிலையை பதிவு செய்துள்ளது. தேசியப்பள்ளி, சீனப்பள்ளிகளை காட்டிலும் தமிழ்ப்பள்ளிகள் சாதனை புரிந்துள்ளன.

தமிழ்ப்பள்ளிகளை புறக்கணித்து விட்டு பிற பள்ளிகளில் நம்மின மாணவர்கள் அதிகம் சேர்த்த காலம் மலையேறி இப்போது தமிழ்ப்பள்ளிகளில் நம் மாணவர்களை சேர்க்கும் காலம் கனிந்து விட்டது.

தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் வேளையில் தமிழ்ப்பள்ளிகளை காப்பதும் நமது கடமை. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவி திட்டங்களை வழங்கி வரும் நிலையில் தமிழ்ப்பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் முன்வர வேண்டும்.
பத்மநாதன்
வரும் 2020ஆம் தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாகட்டும் என்ற உயரிய சிந்தனையில் இந்திய பெற்றோர்கள் ஆக்ககரமாக செயல்பட வேண்டும்.

அதோடு மாணவர்களின் வெற்றிக்கு முழுமனதாக பாடுபடும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக பத்மநாதன் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment