Thursday 7 November 2019

முந்தைய தவறுகளை மீண்டும் செய்ய விரும்பவில்லை- துன் மகாதீர்

கோலாலம்பூர்-
ஐந்தாண்டு கால தவணை முடிவதற்கு முன்னரே பிரதமர் பதவியிலிருந்து விலகும் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ள பிரதமர் துன் மகாதீர், கடந்த காலங்களில் செய்த தவற்றை மீண்டும் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
தமக்கு பின்னர் நடைபெற்ற நியமங்களில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளன. அதே போன்ற இன்னுரு தவற்றை செய்ய விரும்பவில்லை.

2003ஆம் ஆண்டு தாம் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர் அப்பதவிக்கு துன் அப்துல்லா அஹ்மட் படாவி, டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டதில் தமக்கு அதிருப்தி நிலவுகிறது.

நாட்டின் 5ஆவது பிரதமராக அப்துல்லா அஹ்மாட் படாவி 2003- 2009 வரையிலும் டத்தோஶ்ரீ நஜிப் 2009 முதல் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சி அதிகாரத்தை இழக்கும் வரையிலும் பிரதமராக பதவி வகித்தனர்.
தமது பதவி விலகலுக்கான தேதியும் நேரமும் எப்போது என குறிப்பிட மறுத்த துன் மகாதீர், இந்த தவணை முழுமைக்கும் தாம் பதவியில் நீடிக்கப்போவதில்லை என்றார்.

தாம் பதவியில் நீடிப்பது இரண்டு ஆண்டுகளா? மூன்றாண்டுகளா? என்பதை சொல்ல முடியாது. ஆனால் வாக்குறுதி அளித்ததுபோல திடீரென அப்பதவியிலிருந்து விலகுவேன் என்று அவர் மேலும் சொன்னார்.
Advertisement

No comments:

Post a Comment