Friday 22 November 2019

யூபிஎஸ்ஆர் தேர்வில் 'கெத்து' காட்டிய தமிழ்ப்பள்ளிகள்

கோலாலம்பூர்-
தமிழ்ப்பள்ளிகள் என்றாலே ஏளனமாக நினைத்து தங்கள் பிள்ளைகளை பிறமொழி பள்ளிகளில் நடைமுறைக்கு சவுக்கடி கொடுத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர் யூபிஎஸ்ஆர் மாணவர்கள்.
இன்று வெளியான யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளில் தேர்வு அடைவுநிலையில் தமிழ்ப்பள்ளி சாதித்துள்ளது. தேசிய பள்ளி, சீனப்பள்ளிகளை காட்டிலும் தமிழ்ப்பள்ளிகளின் அடைவுநிலை வெகுவாக உயர்வு கண்டுள்ளது.

இவ்வாண்டு தேர்வு அடைவுநிலையில் தேசியப்பள்ளி 69.77 புள்ளிகளையும் சீனப்பள்ளிகள் 66.16 புள்ளிகளையும் பெற்ற நிலையில் தமிழ்ப்பள்ளிகள் 78.51 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்று சாதித்துள்ளது.

இந்த சாதனை நிகழ்த்தப்படுவதற்கு ஆசிரியர்கள், மாணவர்களின் பங்களிப்பு முதன்மை காரணமாக திகழ்கின்றது.

தமிழ்ப்பள்ளிகளை புறக்கணித்தவர்களுக்கு மத்தியில் தமிழ்ப்பள்ளிகளால் சாதிக்க முடியும் என்று 'கெத்து' காட்டியுள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துகளை கூறுவோம்.

No comments:

Post a Comment