Sunday 10 November 2019

'சொஸ்மா' திருத்தம்: வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம்- ரோனி லியூ

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது ஆட்சியை கைப்பற்றினால் ‘சொஸ்மா’ சட்டம் அகற்றப்படும் என்று வழங்கிய வாக்குறுதியை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அமல்படுத்த வேண்டும் என்று சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ வலியுறுத்தினார்.
சொஸ்மா சட்டம் மனித உரிமையை மீறச் செய்வதாகும். அதனாலேயே அதனை அகற்றுவதற்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனது தேர்தல் கொள்கைகளில் ஒன்றாக அதனை கொண்டிருந்தது.

ஆனால், இன்று சொஸ்மா சட்டம் அகற்றப்படாது, திருத்தம் மட்டுமே செய்யப்படும் என கூறுவது நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

நாட்டில் நிலவும் குற்றச்செயல்களையும் பயங்கரவாதத்தையும் துடைத்தொழிப்பதற்கு பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளன. அதை கொண்டே நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

சொஸ்மா சட்டத்தின் கீழ் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 பேர் உட்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். கடுமையான குற்றங்களை புரிந்தவர்களை பிற சட்டங்களின் கீழ் தண்டிக்கலாம்.

'திருத்தம்'  என்ற பெயரில்  சொஸ்மா சட்டத்திற்கு இன்னும் உயிர் கொடுத்து கொண்டிருப்பதை விட அதை முற்றாக நீக்குவதே சிறந்ததொரு தீர்வாக அமையும் என்று ரோனி லியூ மேலும் கூறினார்.
Advertisement 

No comments:

Post a Comment