Friday 22 November 2019

யூபிஎஸ்ஆர் தேர்வில் 8ஏ பெற்றார் கெளரி

கிள்ளான் -
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவின் புதல்வி கெளரி யூபிஎஸ்ஆர் தேர்வில் அனைத்து பாடங்களிலும் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
இன்று வெளியான யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளில் கெளரி அனைத்து பாடங்களிலும் ‘ஏ’ புள்ளியை பெற்றுள்ளார்.

கிள்ளான் ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் பயின்ற கெளரி 8ஏ பெற்று பெற்றோருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தமிழ்ப்பள்ளிகள் மீது பற்று கொண்ட கணபதிராவ், அவரின் துணைவியார் திருமதி புவனேஸ்வரி தங்களது பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியிலே கல்வி பயில வைத்துள்ளனர்.

கணபதிராவின் மூத்த புதல்வி ஜனனி, ஶ்ரீ மூடா எமரால்ட் தமிழ்ப்பள்ளியில் பயின்றவர் ஆவார்.

No comments:

Post a Comment