Thursday 7 January 2021

கோவிட்-19 உச்சம்- இன்று ஒரே நாளில் 3,027 பேர் பாதிப்பு

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 3,027ஆக  பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக 2,000க்கும் அதிகமாக இருந்த கோவிட்-19 பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 3 ஆயிரத்தை எட்டியுள்ளது.

இந்நோய்க்கு புதிதாக 8 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தனது முகநூலில் பகிர்ந்துள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு நாட்டில் இதுவரை 128,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 102, 723 பேர் குணமடைந்துள்ள நிலையில் 25,221 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நோயினால் இதுவரை 521 பேர் மரணமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment