Friday 8 January 2021

பினாங்கு தைப்பூசம் ரத்து- வீட்டிலிருந்தே கொண்டாடுங்கள் - பேராசிரியர் இராமசாமி

பட்டர்வொர்த்-

முருகப் பெருமானை வேண்டி கொண்டாடப்படும் தைப்பூச விழா இவ்வாண்டு பினாங்கில் ரத்து செய்யப்படுவதாக பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார்.

தைப்பூச பெருநாளின் போது மேற்கொள்ளப்படும் ரத ஊர்வலம் மட்டுமின்றி, காவடிகள், பால்குடம் ஏந்துதல், தேங்காய் உடைப்பது, முடி காணிக்கை தண்ணீர் பந்தல் அமைப்பது, அன்னதானம் வழங்குவது ஆகியவற்றுக்கும் அனுமதியில்லை என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிடமடைந்து வருவதால் இவ்வாண்டு தைப்பூச விழா ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாண்டு தைப்பூச விழாவை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியம், ஒற்றுமை துறை, பினாங்கு பாதுகாப்பு மன்றம், போலீஸ் ஆகிய தரப்புகளுடான சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment