Friday 8 January 2021

SOP தீவிரமாக கட்டுப்படுத்தப்படலாம்- தற்காப்பு அமைச்சர்

கோலாலம்பூர்-

கோவிட்-19 பெருந்தொற்று பரவலை தடுக்கும் வகையில் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) இன்னும் தீவிரமாக கட்டுப்படுத்துவதை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக முதன்மை தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசனையின் பேரில் கூடிய விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரலாம். 

எஸ்ஓபி-ஐ கட்டுப்படுத்தும் வகையில் சில துறைகளின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றார் அவர்.

குறுகிய காலத்தில் பிரதமர் இந்த அறிவிப்பை செய்வார் என்று அவர் மேலும் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று எண்ணிக்கை நேற்று 3,000க்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட நிலையில் மார்ச் மாத பிற்பகுதியில் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கை நாளொன்றுக்கு 8,000-ஆக பதிவாகலாம் என்று சுகாதார அமைச்சு கோடி காட்டியது.



No comments:

Post a Comment