Sunday 24 January 2021

வரி வசூலிக்கலாம், விடுமுறை தரக்கூடாதா? கெடா எம்பி-ஐ விளாசும் சமூகவலைதளவாசிகள்


ரா.தங்கமணி 

கோலாலம்பூர்-

தைப்பூச விழாவுக்கு கெடா மாநிலத்தில் வழங்கப்பட்டு  வந்த சிறப்பு விடுமுறையை ரத்து செய்வதாக அம்மாநில மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் வெளியிட்ட அறிவிப்புக்கு இந்திய சமூகத்தில் பெரும் எதிர்ப்பலை எழுந்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபி) காரணம் காட்டி வரும் 28ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூச விழாவுக்கு கெடா மாநில அரசு சிறப்பு விடுமுறையை வழங்காது என்ற அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டது. இதற்கு பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில் சமூகவலைதளவாசிகளும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

சமய தீவிரவாதத்தின் தொடக்கம், இறுமாப்பின் உச்சம் என்று K S Maniam Subramaniam என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பானை ஆதரித்ததற்காக முஸ்லீம் அல்லாதோரை  பழிவாங்க முயற்சிக்கிறார் கெடா எம்பி என்று Mike Varma எனும் பயனர் கூறியுள்ளார்.

சனுசி பதவி ஏற்றுக் கொள்ளப்பட்ட காலம் முதல் இந்திய சமூகத்திற்கு தலைவலியான தலைவர் என்பதை காண்பிக்கிறார். அவரை போல் ஒரு இனவாத தலைவருக்கு எப்படி நம் இனத்தவர் ஆதரவு தருகின்றனர் என்பதுதான் வியப்பாக இருக்கிறது. பாஸ் கட்சி ஒரு சந்தர்ப்பவாத கட்சி என்பதை காலம் காலமாக நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தூய்மையான பாஸ் கட்சியின் தலைவர் நிக் அஸிஸ் அவர்களோடு அந்த கட்சிக்கு இருந்த மரியாதை இப்போது 10 சதவீதம் கூட இல்லை. இதுதான் உண்மை என்று Kirupaul Kiruba கருத்து பதிவிட்டுள்ளார்.

கெடாரத்தில் அதிக தமிழ் இந்துக்கள் வாழ்கிறார்கள், பாரம்பரிய விழா அங்கு நடந்தது. ஆகையால் அதிகம் இந்துக்கள் மாநிலமாக கெடா விளங்குகிறது, அவர்களிடம் வரி வசூலிக்கும் மாநில அரசு ஏன் விடுமுறையை தரக்கூடாது என்று வள்ளுவர் குறள் வள்ளுவம் எனும் சமூக ஊடக பயனர் கருத்து பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment