Saturday 9 January 2021

பிஎன் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொண்டார் அஹ்மாட் ஜஸ்லான்

பெட்டாலிங் ஜெயா- 

பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கான தனது ஆதரவை மீட்டுக் கொள்வதாக மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் ஜஸ்லான் யாக்கோப் தெரிவித்தார். 

அண்மையில் மலேசிய செம்பனை எண்ணெய் வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகிய அஹ்மாட் ஜஸ்லான் தமது முடிவை இன்று செய்தியாளர்களிடம் விவரித்தார்.

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொள்ளும் இரண்டாவது அம்னோ நாடாளுமன்ற உறுப்பினராக அஹ்மாட் ஜஸ்லான் திகழ்கிறார். ஏற்கெனவே குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலி பிஎன் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment