Monday 30 September 2019

‘பரமபதம்’ மலேசிய திரைப்படங்களின் மீது கவனத்தை திருப்பியுள்ளது; நடிகர் பாக்யராஜ்

கோலாலம்பூர்-
மலேசியத் தமிழ் திரைப்படங்களை பார்த்திராத தன்னை, மலேசிய திரைப்படங்களின் மீது கவனத்தை திருப்பியுள்ளது ‘பரமபதம்’ திரைப்படம் என்று நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.
இந்தியாவை அடுத்து அதிகமான தமிழர்கள் வாழ்கின்ற மலேசியாவில் தற்போது தமிழ்த் திரைப்படத் துறை வளர்ச்சி கண்டு வருகிறது.
மலேசிய திரைப்பரங்களை நான் பார்த்ததில்லை. 

ஆனால், தற்போது இயக்குனர் விக்னேஷ் பிரபு இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் ‘பரமபதம்’ திரைப்படத்தின் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ‘பரமபதம்’ திரைப்படம் தம்முடைய கவனத்தை மலேசியத் திரைப்படங்களின் மீது திருப்பியுள்ளது. 

இளம் இயக்குனர் விக்னேஷ் பிரபு, அவர்தம் குழுவினரின் பெரும் முயற்சியில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘பரமபதம்’ திரைப்பட முதல் காட்சியை நிச்சயம் காண்பேன். இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைய தம்முடைய வாழ்த்துகள் என்று நடிகர் பாக்யராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment