Wednesday 11 September 2019

பெர்க்கிலி உணவகம் இடிக்கப்பட்டது- கிள்ளானில் பரபரப்பு

கிள்ளான் -
கிள்ளானில் மிகவும் பிரசித்தி பெற்ற பெர்க்கிலி இந்தியர் உணவகம் நேற்றிரவு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் இந்தியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாவட்ட நில அலுவலகத்திற்குச் சொந்தமான நிலத்தில் அனுமதி இன்றி உணவகம் கட்டப்பட்டுள்ளதாக கூறி மாவட்ட நில அலுவலகம் அதனை அப்புறப்படுத்த நோட்டீஸ் வழங்கியது.

உணவகத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதன் உரிமையாளர்  தொடர்ந்த வழக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து கிள்ளான் மாவட்ட அலுவலகம அதனை இடிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தது.

அதன் அடிப்படையில் நேற்றிரவு 10.30 மணியளவில் உணவகத்தை அப்புறப்படுத்தும் பணி தொடங்கி அதகாலை 2.00 மணியளவில் நிறைவடைந்ததது.

இதனிடையே, பெர்க்கிலி உணவகம் இடிக்கப்படும் தகவலை அறிந்து சம்பவ இடத்தில் ஏராளமானோர் திரண்டதை அடுத்து பாதுகாப்பு பணிகளுக்காக போலீஸ், அமலாக்க அதிகாரிகள், தீயணைப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment