Sunday 15 September 2019

சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவின் தந்தை வீரமன் காலமானார்

ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவின் தந்தை வீரமன் காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக கோலாலம்பூர் பந்தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 12.30 மணியளவஇயற்கை எய்தினார்.

அன்னாரின் நல்லுடல் அவரின் சொந்த ஊரான தெலுக் இந்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் நாளை 16ஆம் தேதி காலை 11.00 மணிக்கு 367, லோரோங் 9, கம்போங் கெரிந்தினா, தெலுக் இந்தான் எனும் முகவரியில் நடைபெறும்.

தந்தையின் பிரிவால் துயருறும் கணபதிராவ், ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராய்டு, குடும்ப உறுப்பினர்களுக்கு 'பாரதம்' இணைய ஊடகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment