Thursday 26 September 2019

மரபு கவிதையே தமிழிலக்கியத்தின் வேர்

தஞ்சோங் மாலிம்-
சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் தொடர்முயற்சியாகத் தேசிய அளவிலான  நல்லார்க்கினியன் மரபு கவிதைப் பரிசளிப்பு விழா  இரண்டாம் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசியத் திருநாட்டில் மரபு கவிதையானது மீண்டும் தழைக்கவேண்டும் என்பதே இவ்விழாவின் நோக்கமாகும்.

மலேசிய நாட்டில் தமிழ்மொழி செழித்திருக்கப் பெரும் பங்காற்றிய இறையருட்கவிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்களின் புனைப்பெயரான நல்லார்க்கினியன் பெயரில் இவ்விழா நடத்தப்படுகிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்விழாவின்  விபரங்கள் பின்வருமாறு:
       
திகதி      :    5 அக்டோபர் 2019 2019
       
நேரம்        : மாலை 3.00 - மாலை 6.00 மணி வரை
       
இடம்       : மைய அரங்கம், பழைய வளாகம், சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம்
 (AUDITORIUM UTAMA, KAMPUS SULTAN ABDUL JALIL SHAH,UPSI.)

இவ்விழாவில் நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்குப்  பரிசளிப்பும் மூத்த மரபு கவிஞர்களுக்குச் சிறப்புச் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டுக்குழுவினர் அன்போடு அழைக்கின்றோம்.

இவ்விழா குறித்த மேல் விவரங்கள் அறிய  நிகழ்ச்சியின் இயக்குநரைத்  தொடர்பு கொள்ளவும்.

சரண்ராசு : 010 4643476
வினோதினி : 010 346 6822

No comments:

Post a Comment