Thursday 5 September 2019

மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்காதீர்; பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார் கல்வி அமைச்சர்

புத்ராஜெயா-
யூபிஎஸ்ஆர் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று 
பெற்றோர்களை கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக் கேட்டுக் கொண்டார்.
நாடு தழுவிய நிலையில் இன்று 445,641 மாணவர்கள் யூபிஎஸ்ஆர் தேர்வை எழுதுகின்றனர். 
மாணவர்கள் தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெறுவதற்கு பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்க நேரிடலாம்.  அழுத்தம் கொடுப்பது சிறந்த நடைமுறை ஆகாது. 
ஆதலால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று கல்வி அமைச்சர் அறிவுறுத்தினார்.

புத்ராஜெயா பிரிசிண்ட் 8(1)இல் உள்ள தேசியப்பள்ளியை பார்வையிட்டபோது மஸ்லீ மாலேக் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment