Thursday 12 September 2019

15ஆவது பொதுத் தேர்தல்; வெற்றி எளிதானதல்ல; துன் மகாதீர்

கோலாலம்பூர்-
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெறுவது அவ்வளது எளிதானது அல்ல என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பி ஊழலே முக்கிய கருவாக இருந்தது. அவரை விலக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாலேயே பக்காத்தான் ஹராப்பான் மகத்தான வெற்றி பெற்றது.

ஆனால் 15ஆவது பொதுத் தேர்தலில் நமது அடைவுநிலையை வைத்து பரப்புரை நிகழ்த்த வேண்டும். அதன் அடிப்படையிலேயே வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும். எனவே பக்காத்தான் ஹராப்பானின் வெற்றிக்கு நாம் அனைவருமே பாடுபட வேண்டும் என்று துன் மகாதீர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment