Tuesday 28 May 2019

தூக்கில் தொங்கினார் மியன்மார் பெண்; ஈப்போவில் சம்பவம்

ஈப்போ-
தூக்கில் தொங்கிய நிலையில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் மேடான் ஈப்போ கடை  வீடொன்றில் நிகழ்ந்தது.

அப்பெண்ணின் அடையாள ஆவணம் எதுவும் காணப்படவில்லை என்றும் அப்பெண்ணின் கணவர் என  சந்தேகிக்கப்படும் ஆடவரை கைது செய்துள்ளதாகவும் ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அலி தம்பி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட அப்பெண்ணின் சடலம் சவப்பரிசோதனைக்காக பெய்மைசூரி பைனுன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

No comments:

Post a Comment