Tuesday 28 May 2019

கேசவன் மீதான பாலியல் குற்றச்சாட்டு; போலீசாரின் விசாரணைக்கே விட்டு விடுவோம்

கோலாலம்பூர்-

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன்  மீதான பாலியல் புகார் மீது போலீசார் விசாரணை மேற்கொள்வர் என்று பிகேஆர் தலைமைத்துவ மன்றம் அறிவித்துள்ளது.
கேசவன் மீது முன்னாள் உதவியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது கடுமையான ஒன்றாக கருதப்படுகிறது. ஆயினும் இது தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதால் போலீசாரின் விசாரணைக்கே இதனை விட்டு விடுவோம்.

இக்குற்றச்சாட்டின் உண்மை நிலையை போலீசார் கண்டுபிடிக்கப்படும். இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கேசவன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதனை மறுத்த அவர், அப்பெண்ணுக்கு எதிராக போலீஸ் புகார் செய்துள்ளார்.

No comments:

Post a Comment