Friday 17 May 2019

தாதியர் கொலை; சந்தேகத்தின் பேரில் நைஜீரிய, பாகிஸ்தான் நாட்டவர்கள் தடுத்து வைப்பு

சைபர்ஜெயா-

இங்குள்ள அடுக்குமாடி ஒன்றில் கழுத்திலும் நெஞ்சிலும் குத்தப்பட்டு  கொலை செய்யபட்ட நிலையில் காணபட்ட செர்டாங் மருத்துவமனையின் தலைமை தாதி சித்தி கரினா முகமட் கமாருடின் காணப்பட்டார்.

கொலை சம்பவம் தொடர்பில் சித்தி கரீனாவின் மரணத்தை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விசாரணைக்கு உதவும் பொருட்டு சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தான், நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் அஸாம் ஜமாலுடின் தெரிவித்தார்.

நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பெண்மணிசெராஸ், தாமான் டாமாய் இண்டாவின் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த  ஆடவர் ஸ்தாப்பாக், தாமான் ஶ்ரீ ரம்பாயில் கைது செய்யப்பட்டார்.

கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள இவ்விருவரும் சிப்பாங் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு  செக்‌ஷன் 302 குற்றவியல் பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.

இக்கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் நைஜீரிய ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment