Thursday 17 September 2020

தீவிரவாதப் பட்டியலிலிருந்து LTTE நீக்கம்: மனு தள்ளுபடி

கோலாலம்பூர்-

தீவிரவாதப் பட்டியலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை (LTTE) நீக்குமாறு டாக்சி ஓட்டுநரான வீ.பாலமுருகன் செய்திருந்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2014இல்  தீவிரவாதப் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கம் இணைக்கப்பட்டதை எதிர்த்து 3 மாதங்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில் தற்போது அதனை நீக்குமாறு கோருவது ஏற்புடையதாகாது என்பதால் இந்த மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதி மரியானா யாஹ்யா தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர் எனும் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விடுதலையான பின்னர், பாலமுருகன் இவ்வழக்கை தொடர்வதட்கு உரிமையில்லாதவர் என இவ்வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்று அவரின் வழக்கறிஞர் ஒமார் குட்டி அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனும் அடிப்படையில்  பாலமுருகன் உட்பட 12 பேர் சொஸ்மா சட்டத்தின் கீழ் கடந்தாண்டு கைது செய்யப்பட்டு பின்னர் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment