Thursday 17 September 2020

தப்பு மேளம் இசையை முன்னெடுக்கும் தாமான் ஶ்ரீ மூடா, செந்தோசா இளைஞர்கள்

ரா.தங்கமணி

கிள்ளான் -

தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான தப்பு மேளம் (பறை இசை ஆட்டம்) கலை முன்னெடுத்து வருகின்றனர் தாமான் ஶ்ரீ மூடா, தாமான் செந்தோசா இளைஞர்கள்.

பழைமை வாய்ந்த இந்த தப்பு  மேளம் கலையை பெரும்பாலானோர் மறந்து விட்ட நிலையில் அக்கலை போற்றி பாதுகாக்கும் முயற்சியில் களம் கண்டு வருகின்றனர் பாகமதிவாணன் தலைமையிலான குழுவினர்.

தாமான் ஶ்ரீ மூடா, தாமான் செந்தோசா பகுதியில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி தப்பிசை குழுவை உருவாக்கி தற்போது இவ்வட்டாரத்தில் பிரபல இசை குழுவாக உருவெடுத்து வருவதாக அவர் சொன்னார்.

ஆலய திருவிழா, கலை நிகழ்வுகள் என பல இடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு தப்பு மேளம் வாசிக்க அழைப்புகள் வருகின்றன. இது தங்களின் குழுவை மேலும் வலுப்பெறச் செய்கிறது.

இளைஞர்கள் தவறான பாதையில் செல்கின்றனர் என்று பலர் குறை கூறுகின்றனர். ஆனால் எங்களின் பாரம்பரிய இசையை மீட்டெடுக்கும் முயற்சிக்கு பெரும்பாலானோர் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

திருவிழா உட்பட பல சமய நிகழ்வுகளுக்கும் எங்களை தாராளமாக அழைக்கலாம் என்று கிள்ளான், ஓம் ஶ்ரீ உத்திர காளியம்மன் தப்பு மேளம் குழுவின் தலைவர் பாகமதிவாணன் கேட்டுக் கொண்டார். 

தொடர்புக்கு; 016- 9464088 (மதி), 016- 5274700 (ரகு)

No comments:

Post a Comment