Sunday 27 September 2020

தோல்வி காணும் தொகுதிகளில் மஇகா போட்டியிடாது- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

லிங்கா

சுங்கை சிப்புட்- 

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறலாம் என ஊகிக்கப்படும் நிலையில் தோல்வி காணக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் மஇகா போட்டியிடாது என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அதிரடியாக அறிவித்தார்.

கடந்த காலங்களில் தோல்வி காணக்கூடிய சாத்தியங்கள் இருந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் மஇகா போட்டியிட்டு தோல்வியை ஏகமானதாக ஏற்றுக் கொண்டது.

ஆனால், இனி வரும் காலம் அப்படி இருக்காது. கூட்டணி கட்சிகளின் முடிவுக்காக மஇகா இனி தனது கௌரவத்தை விட்டுக் கொடுக்காது.

தோல்வி காணக் கூடும் என சாத்தியகூறுகள் உள்ள சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகள் மஇகாவுக்கு ஒதுக்கப்படுமேயானால் அதை கட்சி ஏற்றுக்கொள்ளாது.இனி வெற்றி பெறுவதை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு மஇகா செயல்படும் என சுங்கை சிப்புட்டில் நடைபெற்ற மனிதவள அமைச்சின் வேலை வாய்ப்பு திட்ட நடவடிக்கையின் போது செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment