Wednesday 26 February 2020

மலேசிய அரசியல் நெருக்கடியில் வைரலாகும் நடிகர் சீமான்?

கோலாலம்பூர்-
நெருக்கடி சூழலை நொடி பொழுதில் சந்தித்துக் கொண்டிருக்கும் மலேசியாவின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது என்றவ் கவலை மக்களை வாட்டிக் கொண்டிருக்கிறது.
நாட்டை ஆளக்கூடிய தலைவர்களின் இன்றைய 'கையாலாகத்தனத்தின்' மீது அதிருப்தி கொண்டுள்ள மக்கள் நாட்டின் பொதுத் தேர்தலில் எடுத்த முடிவு சரிதானா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தங்களை அதிருப்தியை வெளிகாட்ட முடியாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கும் மலேசிய இந்தியகளின் சமூக ஊடகத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான்.
இந்தியாவின் அரசியல் போக்கை கண்டித்து அவர் பேசிய காணொளி ஒன்று இன்று மலேசிய இந்தியர்களின் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் தளங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

'பைத்தியக்கார பயலுங்ககிட்ட மாட்டி இந்த நாடும் மக்களும் படுற பாடு..'  என தொடங்கும் சீமானின் காணொளியை இன்றைய இளையோர்கள் வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.

தங்களின் ஆதங்கத்தை இப்படியாவது வெளிபடுத்துகிறார்களே?

No comments:

Post a Comment