Wednesday 26 February 2020

அதிகாரத்தை மக்களிடம் ஒப்படையுங்கள்- டத்தோஶ்ரீ சரவணன்

கோலாலம்பூர்-
நாட்டை நிர்வகிக்கும் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களிடம் வழங்கப்பட வேண்டும் என்று ம இகாவின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தினார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் அமைந்த அரசாங்கம் தோல்வியை தழுவியுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியை சமாளிக்க வேண்டுமானால் பொதுத்  தேர்தல் நடத்தப்படுவதே சிறந்த வழியாகும்.

நாட்டை ஆளும் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கு அதிகாரத்தை மக்களிடமே வழங்கினால் இன்று நீண்டு கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு எளிய முறையில் தீர்வு காணலாம். அதற்கு பொதுத் தேர்தலுக்கு வழி விடுவதே சிறந்ததாக மஇகா கருதுகிறது என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment