Wednesday 26 February 2020

மக்கள் விரும்பும் அணியே ஆட்சியமைக்க வேண்டும்

ஈப்போ-
நாட்டின் அரசியல் பரபரப்பான சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்கள் விரும்பும் அணியே மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர் எம்.வீரன் குறிப்பிட்டார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஈராண்டுகளுக்குள்ளாகவே சிதறி விட்டது.

இப்போது மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள்? எனும் கேள்வி எழுந்துள்ள நிலையில் கட்சி தாவி கூட்டணியில் இடம்பெறுவதை காட்டிலும் மக்களிடமே தீர்ப்பு வழங்கப்படுவது சிறந்ததாகும்.

தங்களை ஆளக்கூடிய அரசாங்கம் யார்? என்ற முடிவை மக்கள் தீர்மானிக்க நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தலை நடத்துவதே சிறந்ததாகும்.

பொதுத் தேர்தலே சிறந்த வழி என்று மஇகாவின் தேசியத் தலைவர் கூறியுள்ள கருத்தே இன்றைய அரசியல் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வாகும். இல்லையேல் இந்த நெருக்கடி தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கும் என்று வீரன் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment