Tuesday 25 February 2020

பெரும்பான்மையை நிரூபிக்குமா பக்காத்தான் ஹராப்பான்?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டில் நிலவும் இன்றைய பரபரப்பான அரசியல் சூழலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனது பெரும்பான்மையை மக்களவையில் நிரூபிக்க வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது 129 தொகுதிகளை கொண்டு சில கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மையில் ஆட்சி அமைத்தது.

ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி உடைந்து விட்டது. இதில் இடம்பெற்றிருந்த பெர்சத்து கட்சி இக்கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.

தற்போது வரை பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 26 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிகேஆர் கட்சியின் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி ஆதரவாளர்கள் 10 பேரும் பக்காத்தான் ஹராப்பானுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டால் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு பிகேஆர், ஜசெக, அமானா ஆகியவை தள்ளப்படும்.

பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால் ஆட்சியமைப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும், இதன் வழி பக்காத்தான் நேஷனல் தனது பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சியமைக்க முடியும் அல்லது நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவை மாமன்னர் எடுக்கக்கூடும்.

மலேசிய அரசியல் ஒரு குளறுபடியான, பரபரப்பான சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில் தலைவர்களின் அடுத்த நிலைப்பாடு என்ன? என்பதுதான் மலேசியர்களின் மிகப் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

No comments:

Post a Comment