Tuesday 25 February 2020

பக்காத்தான் ஹராப்பான் கதை முடிந்தது- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் கதை முடிந்து விட்டது என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அமைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிலிருந்து பெர்சத்து கட்சியும், பிகேஆர் கட்சியிலிருந்து டத்தோஶ்ரீ அஸ்மின் அலியும் அவரின் ஆதரவாளர்களும் விலகியிருப்பதை அடுத்து அக்கூட்டணியின் கதை முடிவுக்கு வந்துள்ளது.

புதிய கூட்டணியின் ஆட்சி அமைவது குறித்து துன் மகாதீரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மேலவைத் தலைவருமான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment