Friday 28 February 2020

புதிய பிரதமரா? பொதுத் தேர்தலா?- மார்ச் 2இல் முடிவு

கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து புதிய பிரதமர்? யார் என்ற கேள்விக்கு மார்ச் 2இல் விடை கிடைத்து விடும்.

ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையை நிரூபிக்க எந்த கட்சிக்கும் போதிய ஆதரவு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

யாருக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க மார்ச் 3இல் சிறப்பு மக்களவை கூட்டத்தை நடத்துவதற்கு இடைக்கால பிரதமர் துன் மகாதீர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பிரதமராக முன்மொழியப்படுபவர்களுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லையெனில் நாடாளுமன்றத்தை கலைப்பதை விட வேறு வழி இல்லை.


No comments:

Post a Comment