Thursday 20 June 2019

அன்வார் பிரதமராகும் வரை துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் – வான் அஸிஸா

கோலாலம்பூர்-

நாட்டின் பிரதமராக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவியேற்கும் வரை துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
8ஆவது பிரதமராக பதவியேற்பதற்கு ஏதுவாக டத்தோஶ்ரீ அன்வார் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு வழிவிடும் வகையில் துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக வெளிவந்த தகவலை அவர் மறுத்தார்.

முன்பு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப பிரதமராக துன் மகாதீரும் துணைப் பிரதமராக நானும் பதவி வகிக்கிறோம்.
அன்வார் எப்போது பிரதமராக பதவியேற்கிறாரோ அப்போது துணைப் பிரதமர் பதவியிலிருந்து நானும் விலகுவேன். அதில் எவ்வித பிரச்ச்னையும் இல்லை என்று டத்தோஶ்ரீ வான் அஸிஸா தெரிவித்தார்.

No comments:

Post a Comment