Saturday 22 June 2019

சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் மரபு கவிதைப் போட்டி 2019

தஞ்சோங் மாலிம்-
சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின்  தொடர்முயற்சியாகத்  தேசிய  அளவிலான  மரபு கவிதைப்  போட்டி இரண்டாம் முறையாக மலேசியத் திருநாட்டில் மரபு கவிதையானது மீண்டும் தழைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மலேசிய நாட்டில் தமிழ்மொழி  செழித்திருக்கப் பெரும் பங்காற்றிய இறையருட்கவிஞர் செ. சீனி நைனா முகம்மது  அவர்களின்  புனைப்பெயரான நல்லார்க்கினியன்  பெயரில் 
இப்போட்டி நடத்தப்படுகிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போட்டி இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. 

இளையோர் பிரிவு (வயது வரம்பு: 16 வயதிற்கு மேல் 29). இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள்:  

   
   1. இளையோரும் கவிதையும்
               2. இளையோரும் தமிழ்த்திரைப்படமும்
               3. இளையோரும் இணைய உலகமும்
               4. இளையோரும் இன்றைய காதலும்

இவற்றுள் ஏதேனும் ஒரு கருப்பொருளில் கவிதை அமைந்திருக்கவேண்டும். கவிதைகளுக்கு முறையே முதல்நிலைக்கு வெ.1000.00இரண்டாம் நிலைக்கு வெ.750.00, மூன்றாம்நிலைக்கு வெ.500.00 மற்றும் ஆறுதல் பரிசகளாக எழுவருக்கு மட்டும் வெ.200.00 வழங்கப்படும்.

பொதுப்பிரிவுக்கான (வயது வரம்பு: முப்பதுக்கு மேல்). அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள்.
               
               1. மலேசியாவில் தமிழ்க்கல்வி
               2. மலேசியத் தமிழர்களின் பண்பாட்டு மாற்றம்
               3. மலேசிய இலக்கியத்தின் தரம்
               4. மலேசியாவில் தமிழர் கலைகள்

இவற்றுள் ஏதேனும் ஒரு கருப்பொருளில் கவிதை அமைந்திருக்கவேண்டும். கவிதைகளுக்கு முறையே முதல்நிலைக்கு வெ.1500.00இரண்டாம் நிலைக்கு வெ.1000.00மூன்றாம் நிலைக்கு வெ.750.00 ஆறுதல் பரிசுகளாக எழுவருக்கு மட்டும் வெ.200.00 வழங்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்ள இறுதி நாள் 30.6.2019.

வீடியோ இணைப்பு:

No comments:

Post a Comment