Thursday 13 June 2019

என்னுடைய அரசியலை முடிப்பதற்கு நடத்தப்படும் சதி- அஸ்மின் அலி சாடல்

புத்ராஜெயா-

என்னுடைய அரசியல் வாழ்க்கையை முடிப்பதற்காக ஓரினச் சேர்க்கை குற்றச்சாட்டு தம்மீது சுமத்தப்பட்டுள்ளதாக பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.
சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக தம்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தம்மீதான இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அஸ்மின் அலி, இது ஓர் அரசியல் சதிராட்டம் எனவும் தம்முடைய அரசியல் பயணத்தை முடிப்பதற்கு நடத்தப்படும் கீழ்த்தரமானச் செயல் எனவும் அவர் சொன்னார்.

No comments:

Post a Comment