Monday 10 June 2019

பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி; சோதனை கடுமையாக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா-
இந்நாட்டுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்படுவதை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து துறைமுகங்களிலும் கடுமையான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சட்டவிரோதமாக பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவுக்குள் இறக்குமதி செய்யப்படுவதற்கு எதிராக தேசிய திடக் கழிவு மேலாண்மை துறை (NSWMD), சுற்றுச்சூழல் இலாகா (DOE) ஆகியவை இணைந்து நடவடிகை மேற்கொள்கின்றன என்று அதன் இணை இயக்குனர் அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

நாட்டுக்குள் கொண்டு வரப்படும் அனைத்து கொள்கலன்களும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன. குறிப்பாக கிள்ளான் துறைமுகம் மேற்கொள்ளப்படுகிறது.

சட்டவிரோத நடவடிக்கையின் வழி பிளாஸ்டிக் கழிவுகள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதை தடுக்க அரசாங்கம் சிறப்புக் குழுவை அமைத்துள்ளது என்றார் அவர்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் வழி கிள்ளான் துறைமுகத்தில் பிளாஸ்டி கழிவுகளை கொண்ட நூற்றுக்கணக்கான கொள்கலன்கல் கிள்ளான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment