Thursday 20 June 2019

எம்எச்17; நால்வர் மீது குற்றச்சாட்டு

நெதர்லாந்து-

298 பயணிகள், விமான சிப்பந்திகளுடன் பயணித்த எம்எச் 17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பில் நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எம்எச் 17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பில் ரஷ்யாவைச் சேர்ந்த மூவர், உக்ரெய்னைச் சேர்ந்த் ஒருவர் என நான்கு பேர் மீது நெதர்லாந்து போலீஸ் தலைவர் வில்பெர்த் பவுலிசென் குற்றஞ்சாட்டினார்.

கடந்த 2014ஆம் ஆண்டு  ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி பயணித்த எம் எச் 17 விமானம்  உக்ரெய்ன் வான் பகுதியில் சுட்டு  வீழ்த்தப்பட்டது.

இதில் ரஷ்யாவைச் சேர்ந்த இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கெய், ஒலெக் 
புலாதொவ்தஆகியோரும் லியோனிட் கெர்சென்கோ என்ற உக்ரெய்ன் நாட்டவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணித்த 298 பேரும் மரணமடைந்தனர். இச்சம்பவம் மலேசியர்கள் மட்டுமின்றி உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

No comments:

Post a Comment