Wednesday 21 November 2018

நகைக்கடையில் கொள்ளையிட முயன்ற கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில் பலி



கோலாலம்பூர்-
இங்கு ஜாலான் கூச்சாய் லாமாவில் உள்ள பேராங்காடில் ஒன்றில் அமைந்துள்ள நகைக்கடையில் கொள்ளையிட முயன்ற ஐந்து கொள்ளையர்கள் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.

இன்று மதியம் 4.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் நகைகளை கொள்ளையிட்டு தப்ப முயன்ற போது போலீசார் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் உயிரிழந்தனர்.

நான்கு பேர் சம்பவ இடத்திலேயே சுடப்பட்ட  வேளையில் ஓர் ஆடவர் மட்டும் காரில் தப்பிச் செல்ல முற்பட்டபோது 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்ற போலீசார் அவரை சுட்டனர்.

கொள்ளையர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன.

No comments:

Post a Comment