Saturday 12 June 2021

செட்டி பாடாங் பெயர் நிலைநிறுத்தம்

ஷா ஆலம்-

அண்மைய காலமாக சர்ச்சையாக வெடித்திருந்த செட்டி பாடாங் விவகாரத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் முயற்சியில் அப்பெயர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று கணபதிராவின் சிறப்பு அதிகாரி ரா.ஆனந்தன் தெரிவித்தார்.

இந்திய வணக சமூகமான செட்டி சமூகத்தின் அடையாளமாக திகழும் கிள்ளான் செட்டி பாடாங் இந்நாட்டு சமூகத்தின் வரலாற்றுச் சின்னமாக திகழ்ந்து வருகிறது.

சுற்றுலா தலமாக உருவாக்கம் காணும் Royal Klang Town Heritage Walk என அழைக்கப்படும்  வரலாற்று முனையத்திற்காக செட்டி பாடாங் பெயரை மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை கிள்ளான் நகராண்மைக் கழகம் முன்னெடுத்தது. அதற்கு இந்திய சமுதாயத்தின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் கணபதிராவ் முயற்சியில் செட்டி பாடாங் பெயர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று ஆனந்தன் கூறினார்.

செட்டி பாடாங் பெயரை நிலைநிறுத்த முயற்சியை முன்னெடுத்த சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி, கணபதிராவ் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.


No comments:

Post a Comment