Wednesday 30 June 2021

உதவி வேண்டுமா? வெள்ளை கொடியை ஏற்றுங்கள்


கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பினால் அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் வருமானம் பாதிக்கபட்டுள்ள மலேசியர்கள் தங்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பிறரின் உதவிகள் கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் இருக்கும் மலேசியர்களுக்கு ஒரு தீர்வாக அமைந்துள்ளது வெள்ளை கொடி பிரச்சாரம். வறுமையில் சிக்கி தவிப்பவர்கள் தங்கள் வீடுகளில் வெள்ளை கொடியை ஏற்றினால் உதவும் நல்லுள்ளம் கொண்டவர்களால் அவர்களுக்கு உதவிகள் வந்து சேரலாம் எனும் எண்ணத்தில் வெள்ளை கொடி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வெள்ளை கொடி பிரச்சாரத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் வறுமையில் உள்ளவர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment