Wednesday 2 June 2021

கோவிட்-19: மக்களிடையே விழிப்புணர்வு தேவை- கணபதிராவ்

 ஷா ஆலம்-

கோத்தா கெமுனிங்  சட்டமன்ற தொகுதி அலுவலகம்  ஏற்பாட்டில் நடத்தப்பட்ட  கோவிட்-19  பரிசோதனை நடவடிக்கையில் 3,000 மக்கள் கலந்து கொண்டு தங்களை பரிசோதித்து கொண்டனர்.

 நாட்டை உலுக்கி  வரும் கோவிட்-19. வைரஸ் பாதிப்பிலிருந்து  மக்களை பாதுகாக்கும்  வகையில் சிலாங்கூர் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு நேற்று தாமான் ஸ்ரீ மூடாவில் நடைபெற்றது.

கோவிட்-19)  வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி மக்கள் உயிர்க்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள நிலையில் மக்கள் அதிக விழிப்புடனும்  எஸ்ஓபி நடைமுறைகளைக் கடைப்பிடித்து அந்த பாதிப்பில் இருந்து விலகி நிற்க வேண்டும் எனவும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான வீ.கணபதிராவ் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில சுகாதாரத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா, கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாபு ஆகியோர் நேரில் வந்து நிலவரங்களை பார்வையிட்டனர்.




No comments:

Post a Comment