Saturday 28 November 2020

MKPMS தலைவராக கணபதிராவ் நியமனம்- மலேசிய இந்தியர் குரல் வாழ்த்து

 ஷா ஆலம்-

சிலாங்கூர் மக்கள் சமூகநல மேம்பாட்டு கழகத்தின்(MKPMS) தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவுக்கு மலேசிய இந்தியர் குரல் (MIV) வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டது.

இந்த நியமனப் பதவியின் வழி ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் இன்னும் சிலாங்கூர் மாநில மக்களுக்கு சமூக நல மேம்பாட்டு உதவிகளுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளர் ரா.ஆனந்தன் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகள், தனித்து வாழும் தாய்மார்கள், முதியவர்கள் ஆகியோருக்கான சமூகநல உதவித் திட்டங்களில் ஆக்ககரமான செயலாக்க திட்டங்கள் வரையறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆனந்தன் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment