Thursday 19 November 2020

டாக்சி ஓட்டுனர்களுக்கு தீபாவளி பற்றுச்சீட்டுகளை வழங்கினார் செராஸ் எம்பி தான் கொக் வய்

ரா.தங்கமணி

செராஸ்-

உலகையே அச்சுறுத்தும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் வருமான பாதிப்புக்கு இலக்கான டாக்சி ஓட்டுனர்களும் தீபாவளி பெருநாளை கொண்டாடி மகிழும் வகையில் தீபாவளி பற்றுச்சீட்டுகளை வழங்கினார் செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கொக் வய்.



கோவிட்-19 பாதிப்பினால் கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் (எம்சிஓ) பல்வேறு தொழில்நிறுவனங்கள் முடக்கப்பட்டன. அதனால் பல நிறுவனங்கள் மூடப்பட்டதோடு பெரும்பாலானோர் வேலை இழப்புக்கும்  ஆளாகினார்.

மக்கள் நடமாட்டம் குறைந்ததால் பொதுமக்களையே பெரிதும் நம்பியிருக்கும் டாக்சி ஓட்டுனர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கினர். வருமானம் ஏதுமின்றி பாதிப்புக்கு இலக்கான துறைகளில் டாக்சி தொழிலும் ஒன்றாகும் என்று ஜசெக தலைவருமான தான் கொன் வய் விவரித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு டாக்சி தொழில்துறையும் இன்றியமையாதது. எனவே பொருளாதார பாதிப்பை எதிர்நோக்கியுள்ள டாக்சி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட அரசாங்கம் சிறப்பு உதவித் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் நடைபெற்ற இந்த பற்றுச்சீட்டு வழங்கும் நிகழ்வில் கோலாலம்பூர் வட்டாரத்தில் சேவையில் ஈடுபட்டு  வரும் 200 டாக்சி ஓட்டுனர்களுக்கு தீபாவளி பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment