Thursday 3 December 2020

தைரியம் இருந்தால் மஇகாவை ரத்து செய்யுங்கள்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் காட்டம்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

தைரியம் இருந்தால் மஇகாவை ரத்து செய்து பாருங்கள் என்று கெடா மந்திரி பெசார் முகமட் சுனுசி முகமட் நோருக்கு சவால் விடுத்தார் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்.

ஆலய உடைப்பு விவகாரங்களில் தன்மூப்பாக செயல்பட்டு வருகிறது பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசு.

கெடா மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைத்த குறுகிய காலத்திலேயே இரு ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

ஆலய உடைப்பு விவகாரம் குறித்து குரல் எழுப்பிய மஇகாவை தடை செய்ய வேண்டும் என்று கெடா மந்திரி பெசார் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்திய சமுதாயத்தின் உரிமைக்காக மஇகா தொடர்ந்து குரல் கொடுக்கும்.

பாஸ் கட்சியின் இரட்டை முகம் இப்போதுதான் புரிகிறது. ஆட்சியில் இல்லாதபோது ஒரு முகமும் ஆட்சியில் அமர்ந்த பின்னர் இன்னொரு முகத்தையும் பாஸ் கட்சி காட்டுகிறது.

வெளுத்ததெல்லாம் பால் என நம்பி மஇகா ஏமாந்து விட்டது. இப்போதுதான் பாஸ் கட்சியின் உண்மை முகம் தெரிகிறது.

இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுப்பதை மஇகா ஒருபோதும் நிறுத்தாது. 

மஇகா தடை செய்ய வேண்டும் என கூறியுள்ள முகமட் சனுசி, முடிந்தால் மஇகாவை தடை செய்து பாருங்கள் என்று விக்னேஸ்வரன் சவால் விடுத்தார்.

No comments:

Post a Comment