Saturday 29 April 2017

பிகேஆர் உறவை துண்டித்தால் சிலாங்கூர் அரசு பதவிகளிலிருந்து விலகுக!

பிகேஆர் உறவை துண்டித்தால்

சிலாங்கூர் அரசு பதவிகளிலிருந்து விலகுக!




ஷா ஆலம் 
பிகேஆர் கட்சியுடனான உறவை துண்டித்துக் கொள்ள பாஸ் கட்சி முடிவெடுக்குமானால்  சிலாங்கூர் மாநில அரசில் வகித்து வரும் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிகளை அது துறக்க வேண்டும் என பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுசன் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கெனவே ஜசெக கட்சியுடனான உறவி துண்டித்துக் கொண்டுள்ள பாஸ் கட்சி  தற்போது பிகேஆர் கட்சியுடனான உறவையும் துண்டித்துக் கொள்ளும்  முடிவை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தகைய முடிவை பாஸ் கட்சி எடுக்குமானால் சிலாங்கூர் மாநில அரசில் அங்கம் வகிக்கக்கூடாது எனவும் அவ்வாறு பதவி வகிப்பது நியாயமாகாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிகேஆர் உறவைத் துண்டித்துக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கும் நிலையில், இறுதி முடிவை பாஸ் கட்சியின் உச்சமன்றம் இறுதி முடிவை எடுக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment